அம்மாவின் அருள்வாக்கு

Words of Divine Wisdom

255 Sacred Messages

அம்மா சொல்கிற நியமப்படி பயபக்தியோடு இருமுடி செலுத்தினால், பக்குவத்தோடு இருந்தால் தான் கேட்டது கிடைக்கும்.

எங்கெங்கு இருமுடி எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதோ அங்கங்கு பக்தி வளரும் அழிவுகள் குறையும்.

தொடர்ந்து இருமுடி செலுத்தக் கணக்குப் பார்க்காதே‚ நீ செலுத்தும் ஒவ்வொரு இருமுடிக்கும் பயன் உண்டு.

பொழுது போக்கிற்காக இருமுடி செலுத்தக் கூடாது.

நீ அணியும் சக்திமாலைதான் உனது மனசாட்சி.

மனித இனத்தை இறைவசமாக்க வேண்டியே இலவச இருமுடி போட்டு அழைத்துவரச் சொல்கிறேன்.

இருமுடியும் அன்னதானமும், உங்களையெல்லாம் இறைவசமாக்க உதவும் வழிகள்.

நான் கூறும் விதி முறைப்படி உண்மையாக விரதமிருந்து இருமுடி ஏந்தி வரும் சக்திகளை அழிவிலிருந்து காப்பாற்றுவேன்.

மழை, வெள்ளம், இயற்கைச் சீற்றங்களிலிருந்து விடுபட இருமுடி ஏந்தி வரவேண்டும்.

உங்கள் பாவங்களைத் தணிக்கவே இருமுடி.

இருமுடி விஷயத்தில் கணக்குப் பார்க்காதே.

இருமுடித் தொண்டு பொறுப்பான தொண்டு‚ அத்தொண்டு என்றும் வீண் போகாது.

இருமுடி செலுத்தினால் மட்டும் போதாது‚ பத்துப் பேருக்குத் தருமம் செய்ய வேண்டும்.

ஏழை, எளிய மக்களுக்கும் சக்தி மாலை அணிவித்து அழைத்து வருவது இந்த நாட்டிற்கும் நல்லது.

தொடர்ந்து இருமுடி செலுத்து‚ ஒன்பது மாலை போதும்‚ பத்து மாலை போதும்‚ என்று நிறுத்திக் கொள்ளாதே.

விரதமிருந்து, கட்டுப்பாட்டை மேற்கொண்டு இருமுடி ஏந்தி வருகிற சிலருக்குக் காட்சி கொடுப்பேன்.

இருமுடி பிரிக்கும் போது பிரிப்பவர்களும் மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கருவறையில் இருமுடி அபிடேகம் செய்யும்போது மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கருவறையின் வாயிற்படியை மறைக்காமல் நின்றபடி அபிடேகம் செய்ய வேண்டும்.

உலகமே சிவப்பாகி, சிவப்பு மஞ்சளாகி, மஞ்சள் பச்சையாக மாறுகின்ற வாய்ப்பைக் கொடுக்க போகிறேன்.

ஆன்மிகம் என்பது எளிமையும் வலிமையும் கொண்டது.

ஆன்மா எப்பொழுது நினைக்கிறதோ அப்பொழுதுதான் உடலை விட்டுப் போகும்.

ஆன்மிகத்தில் அவ்வப்போது கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தான் பலன் கிடைக்கும்.

உணர்ச்சி வசப்படுதல், கோபப்படுதல் ஆகிய குணங்கள் ஒருவன் தன்னையே அழித்து விடும்.

இயற்கையில் உருவாகும் கல் அம்மனாகவும், சிவனாகவும் மாறுகிறது. அதுபோல மனிதனும் முயன்றால் தெய்வமாக மாறலாம்.

மருத்துவம், விவசாயம் ஆகிய எல்லாத் துறைகளுக்கும் கடல், ஆகாயம் போன்ற இயற்கை அவசியம்.

ஆன்மிகம், தொண்டு, தருமம் ஆகியவற்றில் சோம்பேறித்தனம் ஏற்பட்டால் அழிவு ஏற்படும்.

ஆலயத்தினால் உனக்குப் பெருமையே தவிர உன்னால் ஆலயத்துக்குப் பெருமை இல்லை.

ஆரம்பத்தில் எப்படி வந்து செயல்பட்டீர்களோ, அவ்வாறே இப்பொழுதும் செயல்பட வேண்டும்.

முடியாது என்று எதையும் சொல்லக்கூடாது.

உன்னை நினைக்க வைப்பதும் நான். நினைவாக இருப்பதும் நான்தான்.

வெளியில் இருப்பவன் உள்ளே வரமுடியும். உள்ளே இருப்பவன் வெளியே போனால் திரும்பி வரமுடியாது.

ஓய்வு நேரத்தை ஆன்மிகத்துக்காகப் பயன்படுத்த வேண்டும்.

ஆன்மிகத்தில் வழிகாட்டியாகவும் ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும்.

அரசியல் பற்றிக் கவலைப்படாமல் எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

ஒரே எண்ணம்‚ ஒரே பார்வையில் இருக்க வேண்டும்.

உழைப்பு குறைந்து போய் விட்டதால் பற்றாக்குறை அதிகமாகி விட்டது.

உனது தேவைகள், உனது வேதனைகள், உனது சோதனைகள் ஆகியவற்றை என்னிடம் விட்டு விடு.

ஆன்மா என்ற பாத்திரத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நான் கூறுவனவற்றைத் தலையாட்டிக் கேட்டால் மட்டும் போதாது. பொறுப்பேற்றுச் செய்யவும் வேண்டும்.

உங்களுக்கு நான் கற்றுக் கொடுக்கும் ஆன்மிகத்தை நீங்கள் பலருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

பணத்திற்காகச் செய்யும் தொண்டு பிணத்துக்குச் சமம். பக்தியோடு செய்யும் தொண்டுதான் உண்மையானது.

தொண்டு செய்யாவிட்டால் துண்டு விழும். உண்மையான தொண்டு வெளிச்சத்துக்கு வரும். பொய்யான தொண்டு வெளிச்சத்துக்கு வராது.

நீ செய்கிறாய், நான் கொடுக்கிறேன். நான் கொடுப்பதை நீ நான்கு பேருக்குக் கொடுக்க வேண்டும். ஆனால் யாரையும் கெடுக்கக் கூடாது.

செவ்வாடை அணிபவர்களுக்குச் சேவை மனப்பான்மையும், செவிலித்தாய் மனப்பான்மையும் இருக்க வேண்டும்.

எப்பொழுதும் சந்தோஷத்துடனும், உண்மை உணர்வோடும் தொண்டு செய்ய வேண்டும்.

நீ இருக்கும் வரை வாழ்வதற்கு நான் வழிகாட்டியாக இருக்கிறேன்.

அமைதியாக வாழ்ந்து விட்டுப் போவெளியில் இருப்பவன் உள்ளே வருவான். உள்ளே இருப்பவன் வெளியில் போகாமல் பார்த்துக் கொள்.

கணவன் மனைவியாகப் பொதுத் தொண்டில் ஈடுபடுவது கடினம். ஆனாலும் அப்படி ஈடுபட்டால் நல்ல பயன் உண்டு.

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்களில் சென்று வழிபட்டாலே பயன் உண்டு.

ஆன்மிகத்தில் தொண்டுதான் முக்கியம்.

அடிக்கடி தூசு தட்டுவது போல, தொண்டு, தருமம் உள்ளம் ஆகியவற்றை தட்டி எழுப்ப வேண்டும்.

தருமம், தொண்டு செய்து வந்தால் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் பொறாமையும் அழுக்கும் சேர்ந்தால் ஆபத்து.

அம்மா இருக்கிறாள் என்று பாம்பு, தேள் இருக்கும் இடத்தில் கை வைக்கக் கூடாது.

அம்மா சொல்லிவிட்டார்களே என்று கடனே என்றும் செய்யக் கூடாது.

சாதாரண நிலையிலும் நான் அடிகளாரோடு இருப்பேன்.

ஆயிரத்தெட்டு முறை பாலகன் பார்வை எவன் எவன் மீது படுகின்றதோ அவனுக்கெல்லாம் ஜென்ம சாபல்யமடா.

நீ அடிகளாரிடம் கற்றுக்கொள்ள முடியாததை வேறெங்கும் சென்று கற்றுக்கொள்ள முடியாது.

நம் சித்தர் பீடத்தில் ஏழை பணக்காரன் அனைவரும் சமம். இவ்விடத்தில் பெண் சக்திகட்கு முன்னுரிமை உண்டு.

இங்கே வந்தால் உங்கட்குப் பணம் காசு கிடைக்கிறதோ இல்லையோ, மன அமைதி நிச்சயம் கிடைக்கிறது.

பக்தர்கட்கு அம்மாவின் பிரசாதங்களான குங்குமம், திருநீறு கொடுக்கும்போது, பயபக்தியுடன் கொடுக்க வேண்டும். எடுத்து வீசுவது போல் வழங்கக் கூடாது.

தெய்வத்துக்குச் செலவு செய்து யாரும் கடனாளியாவது இல்லை.

மனிதர்க்குக் கடன் கொடுத்தவன் தான் இன்றைய பிச்சைக்காரன்.

தெய்வத்துக்குச் செலவு செய்து கெட்டவன் இல்லை மனிதர்க்குச் செலவு செய்து வாழ்ந்து கெட்டவர் உண்டு.

பெண்கள் நகைக்காக அதிகம் செலவு செய்கிறார்கள். நகையால் ஆபத்துக்கள் தான் மிஞ்சும்.

அம்மா நம்மை வளர்க்கிறபோதே நாமும் நாலுபேரை வளர்க்கணும். கூடவே தான தருமங்களைச் செய்ய வேண்டும்.

வேள்விக்குழு‚ பிரச்சாரக்குழு‚ இளைஞர் அணி‚ மூன்றும் சூலத்தின் மூன்று கிளைகள் போன்றவை.

அதனைத் தாங்குகிற தாங்கிதான் நம் அம்மா. நம்மைத் தாங்கி நிற்பது அம்மாதான் என்பதை மறந்து விடக்கூடாது.

நம் தொண்டர்கள் ஒரு குடும்பம் மாதிரி, ஆன்மிகத்தில் இணைந்து தொண்டுகள் செய்து வர வேண்டும்.

முதியவர்களிடம் அனுபவம் மிகுதி‚ எடுத்துச் செய்யும் ஆற்றல் இளைஞர்களிடம் மிகுதி‚ உங்கள் மனசு சுத்தமாக இருக்க வேண்டும்.

உங்கள் உள் மனமும் சுத்தமாக இருக்க வேண்டும். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் நன்றாக இருந்தால்தான் ஆலயமும் நன்றாக இருக்கும்.

ஆலயம் நன்றாக இருந்தால் தான் இயற்கையும் நன்றாக இருக்கும். இயற்கை நன்றாக இருந்தால் தான் பஞ்ச பூதமும் நன்றாக இருக்கும்.

பஞ்ச பூதங்கள் நல்லவனா கெட்டவனா என்று பார்ப்பதில்லை. அம்மாவும் அது மாதிரிதான்.

பஞ்ச பூதங்கள் எல்லோர்க்கும் பொது. அம்மாவும் அது மாதிரி எல்லோர்க்கும் பொது.

வழிபாட்டை உரிய முறையில் மன ஒருமையோடும் செய்தால் தான் பலன் கிடைக்கும்.

தொண்டு செய்யும் போது தானாகவே மனம் அதில் லயித்து விடுவதால் பலனும் உடனே கிடைக்கிறது.

ஒவ்வொருவரும் உள்ளேயும் அம்மா இருக்கிறாள். எனக்குத் தெரியும்.

உங்கள் முற்பிறவி, உங்கள் துன்பம், அதற்கான காரணங்கள் எல்லாம் தான் தெரிகின்றன.

நம் இயக்கத்திலும் பெண்களிடம் ஆர்வமும் எழுச்சியும் அதிகம். அவர்களுக்குத் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அம்மா என்னிடம் மட்டும் இல்லை‚ உங்கள் ஒவ்வொருவர் உள்ளேயும் அம்மா இருக்கிறாள்.

தியானம் செய்வதை விடத் தொண்டு செய்வது சுளுவானது.

உங்கள் மனத்தை ஒருமுகப்படுத்தித் தியானம் செய்யும்போது அம்மா அடக்கத்தைப் பின்பற்ற வேண்டி வரும்.

விழாக்களைக் கொண்டாடுவதன் மூலந்தான் பக்தர்களும் அன்பும், பக்தியும் வளர்வதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.

எந்த விழாவைக் கொண்டாடினாலும் உள்ளத்தில் உண்மை உணர்வும், பக்தி உணர்வும் கூடிய பண்பு தேவை.

விழாக்கள் என்பதெல்லாம் உங்களுக்குத்தானே தவிர, உங்களுக்குள்ளே இருக்கும் ஆன்மாவிற்கு அல்ல.

இங்கு நடைபெறும் விழாக்கள் எல்லாம் உங்களுடைய எதிர்கால வளர்ச்சிக்காக.

விழாக்கள் எனக்கோ அடிகளார்க்கோ அல்ல. மரம், செடி வளர்வதற்கும் கவனிப்பு தேவை.

அதுபோல ஆன்மிகம் வளர்வதற்கு விழாவும், தருமமும் தேவை.

விழாக்கள் மூலமாக வெளிஉலக அனுபவங்கள் கிடைப்பதுடன், பாவங்கள் சேராமல் பாதுகாப்பும் கிடைக்கிறது.

இங்கு விழாக்களைக் கொண்டாடுவது பெரிதல்ல. வருகிற பக்தர்களுக்குப் பக்குவத்தை உண்டாக்க வேண்டும்.

அமைதியை நிலைநாட்ட வேண்டும்.

மனிதனின் மனம், செயல், பார்வை மூன்றும் ஒருநிலைப்பட வேண்டும். அதற்குத்தான் வேள்வி.

உங்கள் உள்ளம் கலங்கக் கூடாது. அது கறுப்பாக மாறக் கூடாது.

உங்கள் பரம்பரையும், பாரம்பரியமும் காக்கப்பட வேண்டும்.

சித்திரைப் பௌர்ணமி முக்கியமான பௌர்ணமி. ஏதோ யாக குண்டம், ஏதோ பூஜை என்று நினைக்கக் கூடாது.

உலகத்துக்கு ஆன்மிகத்தை எடுத்துக் காட்டத்தான் சித்ரா பௌர்ணமி வேள்வி நடத்தப்படுகிறது.

உங்கள் மனத்தை ஒருமுகப்படுத்தும் பயிற்சி பெறவே விழாக்கள் ஏற்பாடு செய்து தருகிறேன்.

வழிபாடுதான் மனிதனுக்கு நிம்மதியைக் கொடுக்கும். இறைவழிபாடு மனிதனின் அன்றாடக் கடமை.

தியானம்‚ யோகம்‚ என்று இருந்தால் மட்டும் போதாது. உடல் உழைப்பு வேண்டும். அது பலன் கொடுக்கும்.

ஆண்டுக்குப் பலன் இருப்பதை விட வேண்டுதலுக்குப் பலன் உண்டு.

தத்துவங்களை இனிப்பாகப் பேசலாம். ஆனால் பத்து பேர் ஒன்று சேர்ந்து வழிபாடு செய்வதால் பயன் உண்டு.

மனத்தில் ஏற்படும் பொறாமைதான் கண் திருஷ்டியாக மாறுகிறது.

எதற்கும் மனம் உடையக் கூடாது.

எங்கெங்கே முறையான வழிபாடு நடக்கின்றதோ, அங்கெல்லாம் நல்ல மழை உண்டு.

பஞ்ச பூத வழிபாட்டின் மூலம் வேள்வி செய்யும் போது மழை பெய்யும்.

ஒவ்வொரு விழாவிற்கும் ஓர் உயிர்ப்புத் தன்மை உண்டு.

ஆன்மிகத்தில் இறைவழிபாட்டில் தாய் வழிபாடு சிறந்தது.

கண்களைத் திறந்து கொண்டு தியானம் செய்யப் பழக வேண்டும்.

உலக வளர்ச்சிக்கும், தியான பயிற்சிக்கும் இங்கு ஏற்பாடு உண்டு.

கூட்டு வழிபாடு செய்யும் போது வீட்டைப் பற்றி நினைக்காமல், மன நிம்மதியுடன் வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.

மனக்கட்டுப்பாட்டுடன் செய்கின்ற தியானத்தினால் நீங்கள் பல பயன்களை அடையலாம்.

திருஷ்டி என்பது மனத் திருப்திக்காகச் செய்யப்படுவது. மனத்தில் உள்ள பதற்றமே திருஷ்டி.

சூலத்தில் மூன்று பிரிவுகள் உண்டு: பிறப்பு, இறப்பு, மன்னிப்பு என்ற கருத்தை உணர்த்துகிறது.

விலங்குகளும் மனிதர்களும் காட்டில் ஒன்றாக வாழ்ந்த போது பிரச்சனை இல்லை. மனிதன் தன் எண்ணங்களால் விலங்கினமாக மாறுகிறான்.

கடன் கொடுத்துப் பணத்தைப் பாதுகாக்கலாம். ஆனால் கடத்தலில் ஈடுபடக் கூடாது.

நீங்கள் எந்தப் படிப்பு படித்தாலும் அனுபவப் படிப்பு அவசியம்.

நாகரிகம் என்ற பெயரில் விஞ்ஞானம் வளர வளர இயற்கை வளம் மாறுபடுகிறது.

வெளிநாடுகளில் இயற்கை வளம் எல்லாம் செயற்கை வளமாக மாறிவருகின்றன.

நல்ல பரம்பரை நல்ல உலகத்தை உருவாக்கும். நல்ல ஆன்மா, அமைதி, தாய்மை — இவை நல்ல உலகத்தை உருவாக்கும்.

பாத்திரத்தைத் தேய்மானம் வராமல் பாதுகாப்பது போல, உங்கள் மனத்தையும் தேய்மானம் இல்லாமல் பாதுகாக்க வேண்டும்.

வந்த பாதையை நினைத்துப் பார்க்க வேண்டும். பொன், பொருள், பெண் ஆசை, ஆணவத்தை ஒழிக்க வேண்டும்.

ஒரே குணம்‚ ஒரே செயல் — இவை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்.

சக்கரம், தெய்வீகம், ஆன்மிகம் — இவை மனிதனுக்கு அமைதியைக் கொடுக்கும்.

வாள் வீச்சு, சொல் வீச்சு எடுபடாது. உள்ளத்தில் உண்மை வீச்சு இருக்க வேண்டும்.

வருங்காலத்தில் பூ, பொட்டு, மஞ்சள் — இவை மகிமை பெறும். தங்கத்துக்கு மதிப்பு இருக்காது.

நீ எத்தனை சொத்து சேர்த்தாலும் நீ செய்யும் தருமம்தான் நிலையான சொத்து.

பிறருக்குக் கொடுக்க வேண்டும். உழைத்து உயர வேண்டும்.

ஆன்மிகம்தான் எதிர்காலத்தில் மனிதனுக்கு உதவி செய்யும்.

உழைப்பு இல்லாமல் படிப்பையும் விஞ்ஞானத்தையும் நம்பிக் கொண்டிருந்தால் பயன் கிடைக்காது.

உங்கள் மனமே உங்களுக்கு எதிரி. உங்கள் அடியாட்களே எதிரியாக மாறிவிடுவார்கள்.

பணம்தான் தெய்வம். தெய்வம்தான் பணம் என்று நினைக்கிறீர்கள் — அதனால்தான் அழிவு.

உலகத்தில் பித்தலாட்டம் அதிகமாகி விட்டது.

நல்ல ஆன்மா இருந்தும் ஒருவன் தருமமும் செய்வான், தீமையிலும் செய்வான். எதை வைத்து ஒருவரை எடை போட முடியாது.

நீங்கள் சொல்லும், செயலும் ஒன்றாக இல்லாதபோது, வேதனைகளும் சோதனைகளும் வரும்.

ஒருவன் உழைக்கிறான்; ஒன்பது பேர் தூங்குகிறார்கள் — இதுதான் இன்றைய நிலை.

ஒரு பொருள் கைகளில் அடங்கி இருந்தால் சரி; இல்லாவிட்டால் சிதறிவிடும்.

வம்பு, தும்பு இல்லாமல் அன்பு, பண்பு, பாசம் — இவைகளில் இருக்க வேண்டும்.

ஆணவம் வருவது அறியாமையால்தான்.

ஆணவம் ஒழிய வேண்டும். ஆலயம் வரும்போது ஆன்மா வளர வேண்டும்.

அம்மா என்று ஓடி வருகிறீர்கள். பலன் கிடைத்த பிறகு ஓடிவிடக் கூடாது.

உறுதியான பக்தி வர வேண்டும்.

மனிதன் பொறாமைக் குணத்தால்தான் அதிக செலவு செய்கிறான்.

மகன் தந்தைக்குரிய கடமையைச் செய்வதில்லை.

பணம் பாதுகாப்பு அல்ல; குணமே பாதுகாப்பு.

கருவறையில் சுயம்புவை மிதிக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

தினமும் மூல மந்திரம் 108 முறை சொல்லி, இரண்டு வேப்பிலை சாப்பிட வேண்டும்.

நீ தினமும் வேலையில் அமரும்போதும், வீட்டிற்குச் செல்லும் போதும் ஒன்பது முறை ஓம் சக்தி சொல்ல வேண்டும்.

மந்திர வழிபாட்டால் பாவங்கள் குறையும்; ஊழ்வினை கரையும்.

கஷ்டங்கள் வரும்ும்போது மந்திர நூல் படி 108, 1008 முறை படித்தால் வீடு விளங்கும், புதிய வீடும் வாங்கலாம்.

மந்திரங்களை மனதிற்குள் படித்தாலும் போதும்.

யாராவது திட்டினால் எதிர்த்து பேசாதே; மூல மந்திரம் சொல்.

ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அம்மா மந்திரம் சொல்ல வேண்டும்.

உடல் சரியில்லையெனில் சக்தி கவசம் படி.

உள்ளுணர்வில் தோன்றினால் அங்கப் பிரதட்சணம் செய்ய வேண்டும்.

உழைப்பு இல்லாமல் நோய்கள் அதிகரிக்கும்.

அம்மா...அம்மா... என்று பாசத்தோடு வர வேண்டும்.

நீ பாசாங்கு செய்தால் அம்மாவும் பாசாங்கு செய்வாள்.

செவ்வாடைகள் ஒன்று சேர்ந்தால் உலகையே மாற்றலாம்.

பொருள் வேண்டுமா? அருள் வேண்டுமா? இரண்டும் ஒன்றாக வராது.

ஆன்மிகத்தை வளர்க்காவிட்டால் அணுக்குண்டுதான் வளரும்.

கிராமத்துக்குப் போ; அங்கு வழிபாடு செய்; வேள்வி செய்; குருவாரம் வழிபாடு செய்.

கோயிலுக்கு எங்கே போனாலும் ஒழுக்கத்துடன் போ.

தவறு உணர்ந்து மன்னிப்பு கேட்டால் காப்பாற்றுவேன்.

இன்று எங்கும் பாதுகாப்பு இல்லை; பக்தி இல்லை.

சக்தி ஒளி வாங்கிப் படி — அது சக்தியை வழங்கும்.

கடமையைச் செய்தாலே கடவுளைக் காணலாம்.

பிறரை அன்பு, பண்பு, பாசம், தருமம் ஆகியவற்றால் அணை.

தருமம் இரத்தத்தில் ஊறிய குணமாக இருக்க வேண்டும்.

விழா காலங்களில் மட்டுமே உதவி செய்வது தவறு — எப்போதும் தருமம் செய்ய வேண்டும்.

தருமம் செய்வது வாயால் அல்ல; செயலால்.

கொடுப்பேன் என்று சொல்லாதே; கொடுத்து விடு.

இயற்கையைத் தெய்வமாக வணங்கு.

அறிவு, படிப்பு, சொத்து — இவை எல்லாம் இருந்தாலும் தெய்வ அருள் அவசியம்.

எதையும் பழகிப் பார்த்தால்தான் அதன் உண்மை தெரியும்.

தெய்வம் மனிதனாகலாம்; மனிதன் தெய்வமாகலாம் — இயற்கை மட்டும் மாற்ற முடியாது.

இயற்கையை வெட்டி அழித்தால் மனிதன் வாழ முடியாது.

ஆகாயம், பூமி — இவைதான் உணவு, தண்ணீருக்குத் தாய்.

கைகள் உழைப்பதற்காக; காதுகள் நல்லதை கேட்பதற்காக; மூக்கு வாசனை உணர்வதற்காக; கண்கள் நல்லதைப் பார்ப்பதற்காக.

தருமம், ஆன்மிகம், இயற்கை — மூன்றும் நிலையானவை.

இயற்கையைப் பாதுகாப்பது அவசியம்.

தாயன்பு, மகன் அன்பு, மகள் அன்பு — அனைத்தும் தனித்தன்மை.

இயற்கையை செயற்கையாக மாற்றலாம்; செயற்கையை இயற்கையாக மாற்ற முடியாது.

காய்க்காத மரத்திற்கு பந்தபாசம் இல்லை; காய்க்கும் மரத்திற்கு உண்டு.

விதை தூய்மையாக இருந்தால் முளைக்கும்; மனம் தூய்மையாக இருந்தால் பயனளிக்கும்.

தண்ணீர், பனி — இயற்கை மாற்றங்கள்; அவை வாழ்க்கைச் சுற்றுச்சுழற்சி.

இயற்கைக் கோபத்தை மனிதன் தாங்க முடியாது.

ஆடிப்பூர விழாவில் கஞ்சி ஊற்றுதல், பாலபிடேகம் — மழைக்கு முக்கியமானவை.

சுற்றுப்புற மக்களை அழைத்து வரச் சொல்.

அறிவே ஆன்மா; ஆன்மாவே அறிவு.

இல்லறத்தில் துறவு உண்டு — அத்தகைய பெண்கள் துறவியாகினால் சக்தி உண்டு.

பெண்கள் ஆதிபராசக்தி இயக்கத்தில் முன்னுரிமை — வேறு எந்த இயக்கத்திலும் இல்லை.

இன்றைய உலகில் பத்து ரூபாய் சம்பாதித்தாலே பெண்களுக்குச் மதிப்பு.

செவ்வாடை அணிந்த பெண்கள் எதிர்காலத்தில் செவிலியராகப் பணிபுரிவார்கள்.

பலன் எதிர்பார்த்து ஆலயம் வரக்கூடாது.

பெண்களை கவர்ச்சிப் பொருளாக எண்ணக்கூடாது.

பெண் பத்து பேரை ஆன்மிகத்தில் ஈடுபடுத்த வேண்டும்.

பெண் உள்ளம் — நாட்டிற்கு மழை தரும்.

அலங்காரம் அகங்காரமாக மாறக்கூடாது.

பெண் உருவத்திலும் ஆண்மை உண்டு; ஆண் உருவத்திலும் பெண்மை உண்டு.

ஆசைக்கும், ஆணவத்திற்கும் இடம் இல்லை.

பெண்களை அன்னையாக, ஆதிபராசக்தியாகக் காண வேண்டும்.

பெண்ணாகப் பிறந்தோம் என்று நினைக்க வேண்டாம் — தாய்ப்பாசம் உயர்ந்தது.

பெண்களுக்கு ஆன்மிகத்தில் இடம் கொடுக்க வேண்டும்.

பெண் குழந்தைக்கு வன்முறை செய்தால் தேசத்துக்கு கேடு.

பெண்களுக்கு நான் அளித்துள்ள சக்தியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆன்மிகத்தில் பெண்களை வைத்தே உலகம் காப்பாற்றப்படுகிறது.

இந்த ஆலய அமைப்பு உலகில் எங்கும் கிடைக்காது.

பித்தளை பொன்னாவது போல நோய் நீங்கும், ஆதிபராசக்தி தரிசனம் பெற்றால்.

நல்ல நிலத்தில் பயிர் வளரும்; நல்ல உள்ளத்தில் நல்ல எண்ணம் வளரும்.

மேல்மருவத்தூர் — ஆன்மிக ஈர்ப்பு மையம்.

சர்க்கரையைப் பாகு போலப் பயன்படுத்துவது போல அருள்வாக்கை பயன்படுத்த வேண்டும்.

அருள்வாக்கு எதிர்கால கல்வெட்டு.

மருவத்தூர் உங்களை மருந்தாக அமையும்.

ஆன்மாக்கள் சுற்றுவது இங்குதான்.

அருளும், பொருளும், நிம்மதியும் — அனைத்தும் இங்குதான்.

இந்த ஆலயம் இயற்கை வழிபாடு செய்யும் ஒரே ஆலயம்.

இங்கே சலசலப்பு வேண்டாம்; கலகலப்பு வேண்டும்.

ஆன்மிக இயக்கத்தை உடைக்க முயற்சிக்கும் சக்திகள் உண்டு — கவனமாக இருங்கள்.

மேல்மருவத்தூர் மண் திருநீர் — எங்கு இருந்தாலும் மகிமை உண்டு.

உன் ஆன்மா தூய்மையாக இருக்க வேண்டும்.

நவராத்திரி — மௌனம் முக்கியம்.

பத்து நிமிடம் தியானம் — வாழ்க்கைப் பொழுதுகளை மீளாய்வு செய்ய வேண்டும்.

எப்போதும் வேலை, சிந்தனை — தேய்மானம் தரும்.

தியானம் — தேய்மானத்தை குறைக்கும்.

ஒரே சீரான உணவு இல்லை எனில் உடல் ஆபத்து.

உடலுக்கு இயற்கை மருந்துகள் — இவற்றை பயன்படுத்துங்கள்.

உலகம் ஆதிபராசக்தியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆலயத்தை வியாபாரமாக்கக் கூடாது.

சக்திக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை.

எனக்கு உருவம் இல்லை — சோதி, குழந்தை, பாம்பு, விளக்கு — எல்லாம் என் தோற்றங்கள்.

சித்தர்களின் தலைவி நானே.

என்னை ஆராய வேண்டாம்.

இங்கே வந்து செல்வதால் பல ஆபத்துகள் தடுக்கப்படுகின்றன.

இந்த மண்ணை மிதித்தாலே பலன் உண்டு.

நேர்மையான உழைப்பால் வரும் பொருள் மட்டுமே நிலைக்கும்.

விஞ்ஞான வளர்ச்சிக்கு மூன்று பங்கு அழிவு.

துப்பாக்கி — விஞ்ஞானம் மனிதனை அழிக்கிறது.

தண்ணீர், பூமி, காற்று — விஞ்ஞானம் உருவாக்க முடியாது.

அணு ஆயுதம் — பொதுமக்களை அழிக்க உருவானது.

ஓம் சக்தி உலகம் முழுவதும் ஒலிக்க வேண்டும்.

தைப்பூசம் — இருமுடி.

நவராத்திரி — லட்சார்ச்சனை.

ஆடிப்பூரம் — கஞ்சி ஊற்று.

உன் ஊழ்வினை தணிவதற்காகவே இவற்றைச் சொல்கிறேன்.

கிராமம் நகரம்; நகரம் நரகம்.

இயற்கை வாழ்க்கை — இயந்திர வாழ்க்கை மாற்றிவிட்டது.

பிறருக்கு உதவி — நமக்கே செய்யும் உதவி.

தீய எண்ணம் மனித மனதில் புகுந்து விட்டது.

பொதுநலக் காரியங்களில் சுயநலம் — தீவிரவாதம்.

காடுகள் குறைய; விலங்குகள் நகரம் வர.

அருட்காலம் — அருள்வாக்கு கேட்ட காலம்.

இயற்கை வழிபாடு — மன இருளை நீக்கும்.

பொருளாதாரம் வாழ்வின் அடிப்படையல்ல — ஆதரவாக மட்டுமே.

ஆன்மிகம் வாழ்க்கையின் ஆணிவேர்.

மனிதன் பயிராக வளர வேண்டும்.

Explore More Spiritual Wisdom

Visit other sections to deepen your spiritual understanding